Pages

Thursday 5 January 2012

குமரிக் கண்டம்


கண்டம் பெயர்ச்சிக் கொள்கையின்படி எல்லாக்கண்டங்களும் ஒன்றாக ஓட்டிக்கொண்டிருந்ததை பாஞ்சியா என்பர். அதன் ஒருபகுதி கோண்டுவானா நிலம். கோண்டுவானாவின் ஒரு துண்டு தனியாகப் பிரிந்து ஆஸ்திரேலியாக் கண்டத்திலிருந்து பிரிந்து மெல்ல நகர்ந்து வந்து கொண்டேயிருந்தது.
              இப்பகுதியே விந்திய மலைக்குக் கீழுள்ள தென்னிந்தியப் பகுதி. இந்துமாக்கடலில் தனியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போதுதான் அதனைக் குமரிக்கண்டம் என்றனர். அதுவே மேலும் நகர்ந்து ஆசியப்பகுதியில் முட்டியது.  இந்த முட்டலின் அழுத்தத்தாலேயே, இமயமலை தோன்றி படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து பெரிய மலைத் தொடராகிவிட்டது.  
குஜராத் பகுதியில் டயனோசரஸ் கற்படிவங்களும் (fossils) அதன் முட்டைகளின் கற்படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் திருவக்கரைப் பகுதியிலும், அரியலூர்ப் பகுதியிலும் கல்லாகிப் போன மரங்கள் கிடைத்துள்ளன. இவை பழமையின் அடையாளங்கள். இந்நிலத்தின் ஓரம் பாரத்தில் இருந்த மிகச் சிறிய பகுதிகள் அவ்வப்போது கடலுக்குள் சரிந்து விழுந்தபோது அவ்வக்காலம் புலவர்களால் கடல்கோள் என விளக்கப்பட்டது. 
        பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
         குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

என சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. 
      குமரிக் கண்டம் கடலுள் மூழ்கவில்லை. விந்திய மலை உள்ளிட்ட தீபகற்ப இந்தியா ஆசியாவோடு மோதுவதற்கு முன்னிருந்த தீவு நிலையே குமரிக் கண்டம் ஆகும்.

No comments:

Post a Comment